Saturday, 23 July 2016

வேட்டுவரும் பதினெண் குடிமக்களும்

 வேட்டுவரும் பதினெண் குடிமக்களும்

 வேட்டுவருக்கு பணிசெய்த மக்கள் பற்றி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சானங்கள் கூறுகிறது .

"தொண்டை மண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன் குயவன் வண்ணான் ஓலை சொன்னபடி ஒச்சன் கண்தகம் மாலர்வகை ஐவர் வாணியர் மூவர் கந்தமலர் மாலைகாரர் கலைமீது சார் ஓட்டும் பாணன் தலைகாவல்புரி பள்ளி வலையன் பண்டுமுதல் ஊரன் மரிக்கும் இடையன் விருது பலகூறும் வீர முடையான் பதிநென்குடி மக்கள் அனைவரும் வேட்டுவர் பனிசெய்து பல முறைமையும் கொண்டு பரிவட்டமும் கட்டியே வருவர் இக்குவலைய மதிக்கவேதான் கூறரிய கச்சிவாழ் ஏகாம்பரர் ஆலய குமததில் இத்த லிபியே"

நாவிதன்,கணக்கர், குயவர்,வண்ணான்,வலையர் போன்ற மக்கள்கள் வேட்டுவ இனத்துக்கு பணி செய்ததால் வேட்டுவ நாவிதன் ,வேட்டுவ கணக்கர் ,வேட்டுவ குயவர் ,வேட்டுவ வண்ணான், வேட்டுவ வலையர் போன்ற பெயர்களில் இன்றும் அழைக்கபடுகிறார்கள்.இது போல பதினென்குடி மக்களும் வேட்டுவ இனத்துக்கு பணி செய்த மக்கள் ஆவார்கள்.வேட்டுவ குல தலைவருக்கு இடையர்கள் பணிசெய்ததை சங்க இலக்கியங்கள் கூறுகிறது .வேட்டுவ மன்னர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்தவர்கள்  பண்டுமுதல் ஊரன் என்பவர்கள் .

Tuesday, 19 July 2016

நாயன்மார்கள்

வேட்டுவ குலத்தை சேர்ந்த நாயன்மார்கள் :

 கோச்செங்கட் சோழ நாயனார்-சோழ வேட்டுவ குலம்
இடங்கழி நாயனார் -குடுமி வேட்டுவ குலம்
நரசிங்க முனையரைய நாயனார்-மின்ன வேட்டுவ குலம்
புகழ்ச்சோழ நாயனார்-சோழ வேட்டுவ குலம்
கண்ணப்ப நாயனார்-காளத்தி வேட்டுவ குலம்          

Saturday, 16 July 2016

மழகொங்கு வரலாறு


பருத்திபள்ளி நாடு (பருத்திபள்ளி ஊரை சுற்றி உள்ள பகுதிகள் ),ஏழூர் நாடு ( ஏழூர் ,கரடிப்பட்டி , பகுதிகள் ),வல்லவரையர் நாடு (நாமக்கல் கதிரானல்லூர்,மொஞ்சனூர் பகுதிகள் ),வாழவந்தி நாடு (மனப்பள்ளி ,மோகனூர் பகுதிகள் ),முலையூர் நாடு (கொல்லிமலைக்கு தென் கிழக்கு பகுதிகள் ),கொல்லிமலை நாடு(வேட்டம் பாடி ,தூசியூர் ,காளப்ப நாயக்கன்பட்டி,கொல்லிமலை பகுதிகள் ),ராசிபுர நாடு போன்ற சிறு நாடுகள் மழகொங்கத்தில் இருந்ததை கல்வெட்டுகள் கூறுகிறது . திருச்செங்கோடு ,கொக்கராயன் பேட்டை பகுதிகளை கீழ்கரை பூந்துறை நாடு என அழைக்க பட்டது . வேலூர் ,சோழசிராமணி கபிலர்மலை பகுதிகளை கீழ்கரை அரைய நாடு என என அழைக்க பட்டது.
பருத்திபள்ளி நாடு ,ஏழூர் நாடு,வல்லவரையர் நாடு ,ராசிபுர நாடு இந்த நாடுகளை சேல நாடு என அழைக்க பட்டத்தை கல்வெட்டுகள் கூறுகிறது .பருத்திபள்ளி நாடு ,ஏழூர் நாடு,பூந்துறை நாடுகளை நாடாள்வார் நாடு என அழைக்க பட்டத்தை கல்வெட்டுகள் கூறுகிறது. நாமக்கல் கதிர நல்லூர் பகுதியை சேர்ந்த மூஞ்சை வல்லவரையன் என்பவர் பழு வேட்டரையரின் மகளை திருமணம் செய்தவர் இதை விருத்தாசலம் கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .முதலாம் பராந்தக சோழனின் பட்டத்தரசி பழுவேட்டரையரின் மகள் என்பதை செப்பேடுகள் கூறுகிறது .
'ஸ்ரீ கோக்கண்டன் மாந்தரனுக்கு செல்லா நின்ற ஆண்டு 8 இவ்யாண்டு பெருமாள் கீழ் வாழ்ந்து வரும் மழநாட்டான் மூர் கூற்றத்துக்கு கீழ் கூற்றில் எதகம்பாடி வெள்ளான் கூத்தன் காடி நிருத்தியான நெருப்பரை ஆசாரிகள் மகன் நிருத்தசூரன் தந்தையும் தாயாரையும் சாத்தி செய்வித்த கிணறும் வட்டும்'
(திண்டுக்கல் ,ஓட்டன்சத்திரம் கப்பலூர் தண்டபாணி கோயில் அருகே உள்ள தூண் ;கிபி 9)
மந்தரனுக்கு கீழ் பணியாற்றிய மழ கொங்கத்தை சேர்ந்த வெள்ளான் ஆசாரியார் என்பவர் பற்றி கூறப்பட்டு உள்ளது .மாந்தரன் என்பவர் சேர வேட்டுவ குலத்தின் கிளை குலமான மாந்த வேட்டுவ குலத்தை சேர்ந்தவன் .
முதலாம் ராசா ராசா சோழனின் ஆட்சியில் கொள்ளிடம் வடகரையில் இருந்து கொல்லிமலை வரையில் இருந்த பகுதிகளை 'மழ நாடான இராஜாஸ்வரய வளநாடு 'என அழைக்க பட்டது .
'பூ வரியும் பொழிற் சோலை காவிரியை கடந்திட்ட அழகமைந்த வார் சிலையின் மழகொங்க மடிப்பெடுத்து மீண்டொலிய மணிஇமைக்கு மெலிலமைந்த நெடும்புரிசை பாண்டிகொடுமுடி சென்றெய்தி'(பாண்டியர் செப்பேடுகள் ,கிபி 8)
ஆக நாமக்கல் பகுதிகளை மழகொங்கம் என அழைக்க பட்டதை இந்த செப்பேடு உறுதிபடுத்துகிறது . மழகொங்கம் சோழ நாட்டின் எல்லையாக இருந்தது .மழகொங்கம் பகுதியில் 'மழபாடி' என்ற ஊர் வேட்டுவ குலத்தின் காணியாக இருந்ததை சேலம் சங்ககிரி கல்வெட்டு (கிபி 13) கூறுகிறது .
புல்லை வேட்டுவ குலத்தவர்கள் ,மூல வேட்டுவ குலத்தவர்கள்,இரும்புலி வேட்டுவ குலத்தவர்கள்,பொன்ன வேட்டுவ குலத்தவர்கள்,பாண்டிய வேட்டுவ குலத்தவர்கள் ஆகியோர் மழகொங்கம் பகுதிகளை ஆண்டார்கள் என்பதை இப் பகுதியில் கிடைத்த கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது .
'ஸ்வஸ்தி ஸ்ரீ பரகேசரி செங்கோல் பற்றிய ஆண்டு ஐந்தில் திரு வேங்கைவாசல் சிவருக்கு விலை மா மேல் மாத ....க்கு நாதன் மழநாட்டு வேள் வெச்சான் மேதக்கன நந்தா விளக்கு '( புதுகோட்டை அருகே திருவேங்கை வாசல் கோயில் ;கிபி 853).
பாண்டிய வேந்தன் தனக்கு ஒப்பான மழவ மன்னன் மகள் ஒருத்தியை மணந்தான் என்றும் அவளுக்கு பிறந்தவன் ஐடிலவர்மன் என்றும் அவனுக்கு பராந்தகன் என்ற பெயரும் உண்டு என்பதைவும் பாண்டிய செப்பேட்டு சுலோகங்கள் (14,17) கூறுகிறது .

விஜயாலய சோழனின் எழுச்சிக்கு காரணமாக இருந்தவர்கள் மழகொங்கத்தை (மழ நாடு ) ஆண்ட வேட்டுவ குலத்தவர்கள் . விஜயாலய சோழன் தஞ்சாவூரை பல்லவ மன்னன் கம்ப வர்மனிடம் இருந்து கைப்பற்றினான் என்று இத் தலூர் செப்பேடு கூறுகிறது . ஆதித்த சோழன் மழகொங்கத்தை (மழ நாடு ) ஆண்ட வேட்டுவ குலத்தவர்கள், கோநாட்டை ஆண்ட வேட்டுவ குலத்தவர்களை (குடுமி வேட்டுவ குலம்,வளவ வேட்டுவ குலம்,மலைய வேட்டுவ குலம்,காச வேட்டுவ குலம் நடுவில் வேட்டுவ குலம்,) மற்றும் சேர கொங்கு நாட்டை (அமராவதி கரை பகுதிகள் ) ஆண்ட வேட்டுவ குலத்தவர்களை கொண்டு கொங்கு நாட்டை ஆண்டு கொண்டு இருந்த கங்கர் மன்னர்களளை (ராசா வேடர் ) வென்று கொங்கு நாட்டை கைப்பற்றினான்.

போலி வரலாறுகள் ( பொன்னர் -சங்கர்,தீரன் சின்னமலை ,காளிங்க ராயன் அணை)


அண்ணன்மார்- ஓர் ஆய்வு

'வாங்கலான் பாட்டனவன் வாழ்வு சிறுகாற்புலியூர்
தீங்கு செய்த செல்லத்தான் சிற்றப்பன் -ஓங்கு தந்தை
நாமமொழி குன்றனையன் நன்னுநகர் சிற்றலை
தாமரை நாட்சியார் தாய் , என்னும் வெண்பா கிடைத்து இருக்கிறது என்று தி .அ முத்துசாமி கோனார் (கிபி 1858-1944)அவர்கள் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார் .
கொங்கு வெள்ளாள இனத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் சண்டை சக்கரவுகள் இருந்ததையும் ,அந்த குடும்பத்தினர் கொங்கு நாட்டில் கிழங்கு நாட்டு (வேட்டமங்கலம் ,நொய்யல் ,மறவாபாளையம்,துக்காச்சி ,வடிஉடையமங்கலம் ,ஆவுடையார் பாறை பகுதிகள் ) திருகாபுலியூர் (சிறுகாற்புலியூர்) என்னும் ஊரை சேர்ந்தவர்கள் என்பதையும் இந்த வெண்பா உறுதிபடுத்துகிறது . தங்காய் என்னும் தங்கை தன் மூத்தோரை அண்ணன்மார் என்றதால் இப்பெயர் வந்தது .
இந்த சண்டை சக்கரவுகள் 60 ஆண்டுகளுக்கு முன் நடந்தது தி .அ முத்துசாமி கோனார் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார் .ஆக இந்த சண்டை சக்கரவுகள் ஏறக்குறைய கிபி 1870 ஆம் ஆண்டுகளில் நடந்து இருக்க வேண்டும் .நடந்த நிகழ்வுகளை வெண்பாவாக பாடியுள்ளார்கள் .

'கொங்கு நாட்டினராகிய இவர்களை பொன்னிவள நாடு என்று யாரோ ஒருவர் பாடி அச்சிட்டுயுள்ளார்கள் ' என்று தி .அ முத்துசாமி கோனார் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார்.
வேட்டுவ இனத்தின் மீது வெறுப்பு உணர்வு கொண்ட ஒரு சாதி வெறி பிடித்த வெள்ளாளனாள் பாடி அச்சிட பட்டு இருக்க வேண்டும் .இதனால்தான் 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலுக்கு ஆசிரியர் பெயர் இல்லாமல் அச்சிட பட்டு இருக்கிறது .
கிபி 1934-40 இந்த காலகட்டங்களில் 4855 வரிகள் ,128 பக்கங்களை கொண்டு 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலை அச்சிட பட்டு இருக்க வேண்டும்.
கொங்கு கிழங்கு நாட்டு திருகா புலியூர் என்ற ஊரை சேர்ந்த ஒரு வெள்ளாள குடும்பத்தில் நடந்த சண்டை சக்கரவுகளை ,வேட்டுவ இனத்துக்கும் ,வெள்ளாள இனத்துக்கும் நடந்த சண்டையாக 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலில் கூறப்பட்டு உள்ளது .மேலும் திருகா புலியூர் என்ற ஊரில் உழவு தொழில் செய்து வந்த பொன்னர் ,சங்கர் இவர்கள் பொன்னி வள நாட்டை சேர்ந்தவர்களாகவும்,மன்னர்களாகவும் கூறபடுகிறது .மேலும் வேட்டுவ குலத்தவர்களை கெட்டவர்களாகவும் ,பன்றி வளர்ப்பவர்களாகவும் ,நாய் பிடிப்பவர்களாகவும் ,பெண் பித்தர்களாகவும் ,நாகரிகம் இல்லாதவர்களாகவும் ,மோசமானவர்களாகவும் கூறபடுகிறது.
தமிழ் மண்ணை ஆண்ட வேட்டுவ குலத்தவர்களை இழிவுபடுத்தவும் ,உழவு தொழில் செய்த வெள்ளாளர்களை ஆண்ட பரம்பரையினர் என கூறி கொள்ளவும் 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூல் உருவாக்க பட்டு உள்ளது . இந்த நூலை அடிப்படையாக வைத்து அண்ணன்மார் சாமி கதை ,குன்னுடையன் கதை ,தங்காள் கதை என பலநூல்களை எழுதி விட்டு இந்த நூல்கள் ஏட்டு பிரதியில் இருந்து எடுத்து எழுத பட்டதாக பச்சை பொய்யை கூறி இருக்கிறார்கள் . 'வெட்ட வெட்ட தலையும் ' என பொன்னர் ,வேட்டுவருக்கு வரம் கொடுத்ததை உண்மை என மக்களை நம்ப வைப்பதற்கு 'வெட்ட வெட்ட தலைக்கும் வேட்டுவ படை ' எனும் போலிபழமொழிகளை மக்கள் மத்தியில் பரப்பி விட்டு இருக்கிறார்கள் .
அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களோடு ,அண்ணன்மார்(பொன்னர் -சங்கர் ) களை தொடர்பு படுத்தி வுள்ளர்கள் .
மணப்பாறை பகுதியில் இருந்த அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களை முத்தரையர் இனத்தினர் ஆரம்பத்தில் வழிபட்டு வந்தார்கள் .காலபோக்கில் இறந்த முத்தரையர் இனத்தை சேர்ந்த முன்னோர்களுக்கு அந்த கோயில்களில் முத்தரையர் இனத்தினர் கற்களை நட்டு வழிபட்டு வந்தார்கள். வெள்ளாளர்கள் உருவாக்கிய கட்டு கதையை (பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ) அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களோடு தொடர்பு படுத்திய பிறகு முத்தரையர் இனத்தை சேர்ந்த கற்களை பொன்னர் -சங்கர் உடைய கற்களாக எழுதி கொண்டார்கள் .

அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கதை :
அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) பர்வத ராஜா குலத்தை சேர்ந்தவர்கள் .இவர்களுடைய தங்கை பெயர் லோக்கமதா .பல்லவர்கள் உதவியோடு ஜைனர்கள் பர்வத ராஜா குலத்திற்கு தீங்கு செய்து வந்தார்கள் .இதனால் அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) தீங்கு செய்தவர்களை அளிப்பார்கள் .பிறகு பாண்டிய நாட்டில் விசர் என்னுமிடத்தில் அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) மற்றும் லோக்கமதா இவர்களுக்கு சிலை வைத்து வழிபட்டதை பற்றி கூறுகிறது என்று மு அருணாசலம் தனது நாட்டுபுறபாடல் எனும் நூலில் (கிபி 1976) கூறியுள்ளார் .
வசந்தபுரம் ,கவுண்டம்பாளையம் ,எழுமாத்தூர் போன்ற இடங்களில் உள்ள அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களை வேட்டுவ இனத்தினர் வழிபட்டு வருகிறார்கள் .

தீரன் சின்னமலை வரலாறு:

கிபி 1968 யில் புலவர் குழந்தை என்பவர் தீரன் சின்னமலை என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி ஆங்கி லேயர்களை எதிர்த்து போர் செய்தார் என்று போலி வரலாறுகளை உருவாக்கினர். பிறகு வந்த வெள்ளாள வரலாற்று ஆசிரியர்கள் தீரன் சின்னமலை என்பவர் கோட்டையை கட்டி ஆண்டர் என்று எழுதினார்கள் .
காவல வேட்டுவ இனத்தை சேர்ந்த பட்டாலி வேட்டுவ குலத்தை சேர்ந்த அனுமாந்த கவுண்டர் என்பவர் பட்டாலி ஊரில் தனக்கு சொந்தமான நிலங்களை ,வெள்ளாள இனத்தை சேர்ந்த தீர்த்தகிரி சக்கரை கவுண்டர் என்பவருக்கு விற்றதை பற்றி தீர்த்தகிரி சக்கரை பட்டயம் கூறுகிறது .ஆனால் புலவர் ராசு என்பவர் இந்த நிலத்தை ஆயுதங்கள் தயாரிக்கவும் ,வெள்ளையர்களை எதிர்த்து போரிட வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இந்த நிலத்தை விலைக்கு வாங்கினார் என்று ஒரு பச்சை பொய்யை உருவாக்கினர் .மேலும் தீர்த்தகிரி சக்கரை கவுண்டர் என்பவர் தீரன் சின்னமலையின் வம்சாவளியினர் என்று ஒரு பச்சை பொய்யை உருவாக்கினர்.
வெள்ளாள அரசியல்வாதிகள் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தீரன் சின்னமலையை விடுதலை போராட்டகாரர் என்று கூறி தமிழ் மண்ணில் சிலையை வைத்து கொண்டார்கள்.


காலிங்கராயன் அணை -ஓர் ஆய்வு

கிபி 19 ,20 ஆம் நூற்றாண்டுகளில் ஒவ்வொரு சாதியும் தங்கள் தங்களுக்கு உயர்வு தேட புராணக்கதைகளையும், இலக்கியங்களையும் படைத்தனர்.இதன்படி கோனியம்மன் கோயிலை கட்டியவர்கள் கொங்கு வெள்ளாளர்கள் என்றும் கோவை நகரத்தை உருவாக்கியவர்கள் கொங்கு வெள்ளாளர்கள் என்றும் பவானி ஆற்றில் அணைகட்டி ,கால்வாய் வெட்டியது கொங்கு வெள்ளாளர்கள் என்றும் கூறி கொண்டதை கிபி 1801 இல் புக்கானன் என்பவர் சேகரித்த வாய்வழி செய்தி மூலம் அறியலாம் .
காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) கிபி 1801 இல் புக்கானன் என்பவர் சேகரித்த வாய்வழி செய்தியை படித்து இருக்கிறார்கள் .பிறகு கிபி 1808 இல் மெக்கென்சி தொகுத்த காலிங்கராயன் வம்சவழியினர் செய்தியில் பவானி ஆற்றில் அணைகட்டி ,கால்வாய் வெட்டியது காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாளர்கள்) என்று தற்புகழ்ச்சிக்காக கூறி இருக்கிறார்கள் .
காலிங்கராயன் வம்சவழியினர்(டி -3044) செய்தியில் தற்புகழ்ச்சிகள்,கற்பனை புனையுகள் ,உண்மைகள் என கலந்து இருக்கிறது.(சொளியண்டான் வம்சவழியினர்(கொங்கு வெள்ளாளர்கள்,டி -2968) ஒருவர் மராட்டிய மன்னன் சிவாஜி யோட போர் செய்து இறந்தான் என்று கூறி இருப்பது தற்புகழ்ச்சி.இது போல தற்புகழ்ச்சிக்காக காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாளர்கள்) கூறி இருக்கிறார்கள் ).போலி பழம் பாடல்களையும் உருவாக்கி வைத்து இருக்கிறார்கள் .
புலவர் செ.இராசு என்பவர் போலி பட்டயத்தையும்,சாதி பட்டயத்தையும் இணைத்து காலிங்கராயன் அணை கட்டிய பட்டயம் என பெயர் வைத்து கொண்டார் .
'வாணியை அணையாக கட்டி ',அணை கட்டி ' போன்ற வார்த்தைகள் திருச்சி திருவானைகாவல் பாசூர் மட செப்பேட்டில் கிடையாது .பவானி ஆற்றில் அணைகட்டி ,கால்வாய் வெட்டியது காலிங்கராயன் வம்சவழியினர் என்று மக்களை நம்ப வைப்பதற்காக புலவர் செ.இராசு என்பவர் இந்த வார்த்தைகள் செப்பேட்டில் இருப்பதாக பச்சை பொய்யை எழுதி கொண்டார் .
பூந்துறை நாட்டில் உழவு தொழில் செய்து கொண்டு வந்த காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) ,போர் தொழில் செய்து கொண்டு வந்த வெள்ளை வேட்டுவ குலத்தவர்களோடு போர் செய்து வெற்றி பெற்று பவானி ஆற்றில் அணை கட்டி ,கால்வாய் வெட்டினார் என்று கூறுவது தற்புகழ்ச்சி.
காஞ்சிகூவல் நாடு ,பூந்துறை நாடு ,அரைய நாடு ,கிழங்கு நாடு இந்த நான்கு நாடுகளில் கால்வாய் வெட்டப்பட்டு இருக்கிறது .குடுமி வேட்டுவ மன்னர் (கொங்கு சோழர் ),பாண்டிய வேட்டுவ மன்னர்(கொங்கு பாண்டியர் ) ,போசாளர் (கன்னடர் ) ஆட்சியில் இந்த நான்கு நாடுகளில் வேட்டுவ இனத்தை (பனைய வேட்டுவ குலத்தினர் ,மணிய வேட்டுவ குலத்தினர் ,கரைய வேட்டுவ குலத்தினர் ,மூல வேட்டுவ குலத்தினர் ,கிழங்கு வேட்டுவ குலத்தினர் ) சேர்ந்த ஊராளிகள் இந்த பகுதிகளை ஆண்டார்கள் என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது .வெள்ளை வேட்டுவ குலத்தினர் வடபரிசார நாட்டை ஆண்டார்கள் என்பதற்கும் ,வெள்ளோடு பகுதியில் வாழ்ந்தார்கள் என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது.வெட்டப்பட்ட கால்வாய் மன்னனுடைய பெயரில் இருக்க வேண்டும் .
'1913 -ஆம் வருஷம் ஊற்றுக்குழியின் மானேஜர் ஸ்மான் ஜே .எம் துரைசாமி பிள்ளை இங்கிலீஷில் எழுதி அச்சிட்டுள்ள ஜமீன் சரித்திர புத்தகத்திலும் அதை அனுசரித்த கோயமுத்தூர் ஜில்லா மானியுள் முதலிய ஆங்கில சரித்திரங்களிலும்
காலிங்கராயன் என்ற பெயர் காரணமும் அணை கட்டு விவரமும் இதற்கு முரண் படுகிறது.அவைகள் எந்த ஆதாரத்தின் மேல் எழுதியது என்று விளங்கவில்லை '
(கொங்கு நாடு அடைவு இயல் ,தி.அ முத்துசாமி கோனார் )
காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) கிபி 1808 இல் மெக்கென்சி சேகரித்த செய்தியில் ஒரு வரலாறுகளை கூறி இருக்கிறார்கள் .கி பி 1913 -ஆம் வருஷம் ஊற்றுக்குழியின் மானேஜர் ஸ்மான் ஜே .எம் துரைசாமி பிள்ளை இங்கிலீஷில் எழுதி அச்சிட்டுள்ள ஜமீன் சரித்திர புத்தகத்தில் ஒரு வரலாறுகளை கூறி இருக்கிறார்கள் .ஆக காலிங்கராயன் வம்சவழியினர் எந்த ஆதாரமும் இல்லாமல் கூறி கொண்டது உறுதிப்படுகிறது .
பூந்துறை நாட்டில் உழவு தொழில் செய்து கொண்டு வந்த காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) பவானி ஆற்றில் அணை கட்டி ,கால்வாய் வெட்டினார் என்று கூறுவது தற்புகழ்ச்சி என்பது உறுதி படுகிறது.


கொங்கு வெள்ளாளர்கள் ஆண்ட பரம்பரை என தம்ப்பட்டம் அடித்து கொள்வதற்காக உருவாக்க பட்ட போலி பட்டயங்கள்:
மரம் பிடுங்கி பட்டக்காரர் செப்பேடு ,நீலம்பூர் காணி செப்பேடு,ஈஞ்ச குல காணி பட்டயம் ,தென்கரை நாட்டு பட்டயம் ,காலிங்கராயன் அணை பட்டயம்,மாந்திரம் சேரல் மெய்கீர்த்தி ,கன்னிவாடி கண்ணகுல பட்டயம்.


 ஒவ்வொரு சாதியும் தங்கள் தங்களுக்கு உயர்வு தேட புராணக்கதைகளையும், இலக்கியங்களையும் படைத்தனர்.இதன்படி கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் தங்கள் சாதி உயர்ந்த சாதி மற்றும் ஆண்ட பரம்பரையினர் என கூற முற்பட்டன . கிபி 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் தங்கள் கூற்றுக்கு ஆதரவாக போலி நாட்டுபுறபாடல் (பொன்னர் -சங்கர் ),போலி தீரன் சின்னமலை வரலாறு ,போலி பழந்தமிழ் பாடல்கள் மற்றும் போலி பட்டயங்களை உருவாக்கி கொண்டார்கள் .

வேட்டுவர்(தமிழ் ) இனத்தின் மக்கள் தொகை

இன்று வேட்டுவர்(தமிழ் ) இனத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 11 இலட்சம் பேர்

கிபி 1931 வரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புஎடுக்க பட்டது .
கிபி 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பில் வேட்டுவர்(தமிழ் ) 74889 பேர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
கிபி 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 'மாவலியர்'(மாவலி வேட்டுவ குலம்) வேட்டுவ இனத்தின் உட்பிரிவு என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிபி 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பில் காவல வேட்டுவ குலங்கள் மற்றும் வேட வேட்டுவ குலங்கள் வேட்டுவர்(தமிழ் ) இனத்தில் கணக்கெடுப்பு எடுக்கபட்டு உள்ளது .
கிபி 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 'பூலுவர்'(பூலுவ வேட்டுவ குலம் ) 6240 பேர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பூலுவ வேட்டுவர் வேட்டுவ இனத்தின் உட்பிரிவு என்ற வரலாற்று அறிவு இல்லாமல் சாதிகள் பட்டியலில் 'பூலுவர்' என்று கூறப்பட்டு உள்ளது . இந்த அறிக்கையை பின்பற்றியே கிபி 1985 அம்பாசங்கர் சாதிகள் பட்டியல் அறிக்கையிலும்' பூலுவர் ' என்று கூறப்பட்டு உள்ளது.

புன்னம் வேட்டுவ குலம் வேட்டுவரில் ஒரு பிரிவு .இந்த வரலாற்று அறிவு இல்லாமல் கிபி 1985 அம்பாசங்கர் சாதிகள் பட்டியல் அறிக்கையில் ,புன்னம் வேட்டுவ கவுண்டர், என்று தனியாக சேர்க்கபட்டு உள்ளது .

வேட்டுவர் (தமிழ் ) என்று சாதிகள் பட்டியலில் இருந்த பெயரை கிபி 1985 அம்பாசங்கர் சாதிகள் பட்டியல் அறிக்கையில் 'வேட்டுவ கவுண்டர் ' என்று கூறப்பட்டு உள்ளது .கிபி 1985 அம்பாசங்கர் சாதிகள் பட்டியல் அறிக்கையில் வேட்டுவர் (தமிழ் ) 125886 பேர் என்று கூறி இருப்பது தவறான புள்ளி விவரமாகும் .(கிபி 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பில் வேட்டுவர்(தமிழ் ) 81129 பேர் இருந்தார்கள் .இந்தியா சுதந்திரம் வாங்கிய போது மக்கள் தொகை 30 கோடி இருந்தது .இன்று வேட்டுவர்(தமிழ் ) இனத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 11 இலட்சம் பேர் இருப்பதை மறைக்க பட்டு இருக்கிறது .)

இன்று வேட்டுவர்(தமிழ் ) திண்டுக்கல்,கோவை ,திருப்பூர் ,ஈரோடு,கரூர் ,நாமக்கல் ,சேலம் போன்ற மாவட்டங்களின் அதிக அளவிலும் ,மதுரை ,புதுகோட்டை ,திருச்சி ,கிருஷ்ணகிரி,தேனி,தஞ்சாவூர்,நீலகிரி போன்ற மாவட்டங்களில் குறைந்த அளவிலும் வாழ்ந்து வருகிறார்கள் .

சோழ அரசர்


சோழ அரசர்கள் சோழ வேட்டுவ குலத்தை சேர்ந்தவன் என்பதற்கு பல கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கிறது .

சோழ அரசர்களை சென்னி ,வளவர் ,செம்பியர் போன்ற பெயர்களில் அழைக்கபட்டது.

'ஸ்வஸ்தி ஸ்ரீ திருமருவிய செங்கோல் வளவன் தன திரு தமையனோடு போய்'
(IPS-110,கி பி 11,சோழர் )
'ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் மருவிய செங்கோல் வேந்தன் த '
(IPS-111,கி பி 11,சோழர் )
''ஸ்வஸ்தி புயல் வாழ்த்து மணவாளர் புலியனையவும் சகரம் செலயனைத்தும் னூளும் திசை நடப்ப கொற்றவைவும் திருவும் வாழ கொடுங்கலி ..'
(IPS-166,கி பி 12,சோழர் )

'ஸ்வஸ்தி ஸ்ரீ வீர ராஜேந்திர தேவருக்கு யாண்டு நாலாவது முத்தூர் காவலன் வளவரில் உத்தமசோழ பல்லவரையன் மகன் சிங்கனான அங்கராயன் முத்தூர் பெரிய நாச்சியாருக்கு ..'
(1910:165,கிபி 1211,முத்தூர் சோழிஸ்வரர் கோயில் ).
'ஸ்வஸ்தி ஸ்ரீ வீரராஜேந்திர தேவருக்கு யாண்டு நாலாவது கெதிர் நாலாவது காங்கேய நாட்டில் காடவூரில் காவலன் வளவரில் ..மனைகிழத்தி சோழாண்டி பட்டாலியில் ..'
(1920:165,கிபி 1215,பட்டாலி ஊர் )
'ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவருக்கு யாண்டு எட்டாவது காங்கேய நாட்டு முத்தூர் ... வேந்தரில் சல்லன் பு .நவர்'
(1910:162;கிபி 1211,முத்தூர் சோழிஸ்வரர் கோயில்)
.
'..முத்தூர் காணியாளபிள்ளையரில் காவுள வேந்தரில் கருமதசரவண கவுண்டர் மகன் சோழியப்பானும்..'
( முத்தூர் பட்டயம் ,கிபி 15)
வேந்தர் வேட்டுவ கூட்டம் என்று அழைக்கபட்டதை முத்தூர் பட்டயம்) கூறுகிறது .

'ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவருக்கு யாண்டு ஐம்பத்தி அஞ்சாவது வடகரை நாட்டு குளவாற்றூர் ஊரில் இருக்கும் ஊராளி செம்ப வேட்டுவன் தொன்டையன் பிள்ளனான செயங்கொண்ட சோழ கொங்கு ஆள்வான் இக்குளம் அட்டி காலும் வெட்டி விச்சேன்'
(குலோத்துங்க சோழனின் 55 ஆவது ஆட்சி ஆண்டு ,கிபி 1125,கொடிவேரி பவானி அணைகரை கல்வெட்டு )
செம்ப (செம்பியன் ) வேட்டுவ கூட்டத்தை பற்றி இக் கல்வெட்டு கூறுகிறது .
'...காங்கேய நாட்டு பட்டாலியில் காவலன் குறும்பில்லரில் போடன் மனைகிழத்தி கோவி ..நாயனார் ..'
(1920:271,கிபி 1285,பட்டாலி ஊர் காங்கேயம் )
குறும்பில் -குறும்பிலர்-குறும்பில்லர்
'கொடு வில் எயினக் குறும்பில் செப்பின் '(பெரும் பாண் -129)

'வில்லோர் குறும்பில் ததும்பும் 'அகம் -261:14
''ஸ்வஸ்தி ஸ்ரீ வீரராஜேந்திர தேவருக்கு யாண்டு இரண்டாவது கெதிர் ஆறாவது விஜயமங்கலத்து பட்டாலி வேட்டுவன் சொக்கன் கூரன் .."
(SITI VOL-3,NO-1092,விஜயமங்கலம் கல்வெட்டு,கிபி 13)

குறும்பில்லர் வேட்டுவ கூட்டத்தை பட்டாலி வேட்டுவ கூட்டம் என்று அழைக்க பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது .
எயினர் -வேட்டுவர்
வேட்டுவரின் குல தெய்வம் கொற்றவை(போர் தெய்வம் ) ஆகும் .சோழ அரசரின் குல குல தெய்வம் கொற்றவை ஆகும்.

சோழ மன்னன் மும்முடி வேட்டுவ குலத்தை சேர்ந்தவன் என்று பிரமியம் கல்வெட்டு கூறுகிறது .(சோழ மன்னர்களின் கிளை குலத்தினர் பிரமியத்தை தலைமை இடமாக கொண்டு கொங்கு நாட்டை ஆண்டார்கள் ).

திங்களூர் ஊரும் ஊரளிகளும் - திங்களூர் ஊரில் ஊரை ஆள்பவனை குறிக்கும் .
திங்களூர் ஊரும் ஊராரும் அல்லது ஊரார் -திங்களூர் ஊரில் வாழ்ந்து வரும் மக்கள் அனைவரையும் குறிக்கும் .
வேட்டமங்கலம் ஊரும் அரையர்களும் -வேட்டமங்கலம் ஊரில் வாழ்ந்து வரும் அரையர் மக்களை குறிக்கும் .

தென்கரை நாடு அரையர்கள் ,தலையூர் நாட்டு அரையர்கள்,மணலூர் நாட்டு அரையர்கள் பற்றி கல்வெட்டுகள் கூறுகிறது .
அரையர்கள் மற்றும் ஊராளி பற்றி கொங்கு நாட்டில் கிடைத்த 50 துக்கு மேற்பட்ட கல்வெட்டுகள் வேட்டுவ இனத்தை சேர்ந்த கல்வெட்டுகள் .

இறந்த போர் வீரனுக்கு நடுகல் நடும் வழக்கம் வேட்டுவ குலத்தின் வழக்கம். கோப்பெருஞ் சோழனுக்கு நடுகல் நட்டு இருக்கிறார்கள் என்பதனை புறநானூறு 221,222,223 பாடல்கள் மூலம் அறியலாம் .

பாடல் எண் : 3அந் நகரத் தினில்இருக்கு வேளிர்குலத் தரசளித்து மன்னியபொன் னம்பலத்து மணிமுகட்டில் பாக்கொங்கில் பன்னுதுலைப் பசும்பொன்னால் பயில்பிழம்பாம் மிசையணிந்த பொன்னெடுந்தோள் ஆதித்தன் புகழ்மரபிற் குடிமுதலோர்.
பொழிப்புரை : அக்கொடும்பாளூர் நகரத்தில், இருக்குவேளிர் குலத்தில் தோன்றி ஆட்சி செய்து, நிலை பெற்ற பொன்னம்பலத்தின் அழகிய உச்சியில், பொன்னிலமாய கொங்கு நாட்டின் புகழ் பெற்ற தும், எடைமிக்கதும், தூயதுமான பசும் பொன்னினால் விளங்கும் ஒளியுருவின் மேல் வேய்ந்து, பொன்னணிகள் அணிந்த தோளை உடைய ஆதித்த சோழனின் புகழ் தங்கிய மரபின் குடி முதல்வராய்,
குறிப்புரை :பா கொங்கின் - பொன் மணல் பரவப் பெற்ற கொங்கு நாடு. பா - பரவப் பெற்ற. கொங்கு நாட்டின் மண்பகுதி பொன் மணல் துகள்கள் மிக்கு இருப்பது ஆதலின் `பாக் கொங்கின்\' என்றார். துலைப் பசும்பொன் - எடை மிக்க அழகிய பொன். இருக்கு வேளிர் குலத்தவர், பொன்னம்பலத்தைப் பொன் வேய்ந்த ஆதித்த சோழரின் குடி முன்னோர் மரபில் தோன்றியவர் இடங்கழியார் என்பார்.
(இடங்கழி நாயனார் புராணம்,தேவாரம்)

இருக்கு வேளிர் குலத்தவரும்,சோழ அரசனும் ஒரே குலத்தை சேர்ந்தவர்கள் என்று இடங்கழி நாயனார் புராணம்,தேவாரம் பாடல்-3 கூறுகிறது .ஆதித்த சோழன் கொங்கு நாட்டை வென்றதை கல்வெட்டுகள் ,கொங்கு தேச ராசாக்கள் நூல் ,சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .
ஆக இந்த தேவார பாடல்களில் சொல்ல பட்ட செய்திகளை யாராலும் மறுக்க முடியாது .

இருக்குவேளிர்கள் கொங்கு வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள் என்பதை பொன் அமராவதி கல்வெட்டுகள் கூறுகிறது .
"கொங்கு நாட்டு அரசர்கள் சோழ நாட்டில் இருந்தும் ,பாண்டிய நாட்டில் இருந்தும் கேரளத்திற்கு எதிராக தங்களுக்கு உதவுவதற்கு வேட்டுவர்களை அழைத்து வந்தனர் என வழக்கு வரலாறு கூறுகிறது .ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ மன்னர் ஆதித்திய வர்மன் கொங்கு நாட்டை வெற்றி கொள்ள உதவியவர்கள் இவ்வேட்டுவர்களே என வழக்கு வரலாறு கூறுகிறது" (தென்இந்திய குடிகளும் குலங்களும்-தொகுதி 7)

.    செம்பிய (செம்ப) வேட்டுவ குலத்தவர்களை சோழ வேட்டுவ குலம்,புலி வேட்டுவ குலம் ,சூரிய வேட்டுவ குலம் ,வளவன்  வேட்டுவ குலம் ,மும்முடி வேட்டுவ குலம், போன்ற பெயர்களில் அழைக்கபட்டனர்                                     

மாவலி வாணதிராயர்


மாவலி வாணர் ,வாணகோ அரசர்கள் மாவலி வேட்டுவ குலத்தை சேர்ந்த மன்னர்கள் .

 வேட்டுவ குலத்தை மாவலியர் என அழைக்கபட்டதை பற்றி கல்வெட்டுகள் ,செப்பேடுகள் மற்றும் ஓலை சுவடிகள் கூறுகிறது .சாந்தப்படை வேட்டுவ குலம்,உரிமைபடை  வேட்டுவ குலம்,புன்ன வேட்டுவ குலம்,வன்னி வேட்டுவ குலம்,பெருமாள் வேட்டுவ குலம் போன்ற வேட்டுவ குலத்தவர்களை மாவலியர் என்று அழைக்கபட்டத்தை கல்வெட்டுகள் மற்றும் பட்டயங்கள் கூறுகிறது .


'..காங்கேயனை வென்று கடையனை வித்திடோம் வேட்டு மாவலிக்கு விருந்திடோம் பாண்டியன் ..'
(புதுகோட்டை கல்வெட்டு எண்-787,கிபி 16)
வேட்டு மாவலி -வேட்டுவ மாவலி(மாவலி வேட்டுவ குலம்) .

வேட்டுவர்களை பாணர் (மாவலியர்) என அழைக்க பட்டதை வேட்டுவ பாளையக்காரர் வரலாறு கூறுகிறது
கல்வெட்டுகள் ,பட்டயங்கள் 'மாவலியர்' வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுகிறது .

மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய வேட்டுவன் விக்கிரம சோழ மகதை நாடாழ்வாரின் கி.பி.1210 இன் கல்வெட்டு இடம் - அரியலூர் மாவட்டம்,அரியலூர் வட்டம் பெரியமறை சுவேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபக் கிழக்குச்சுவர் காலம் - மூன்றாம் குலோத்துங்கன்,யா.32,கி.பி.1210 .

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவர்த்திகள் மதுரையும் ஈழமும் கருவூரும்பாண்டியன்முடித்தலையும் கொன்உ வீரா அபிஷேகமும் லிஜையா அபிஷேகமு பண்ணி அருளிய திரிபுவ வீரதேவற்கு யாண்டு முப்பத்திரண்டாவதுன அகளங்கபுரத்து உடையார் திருப்பார்பதீஸ்வரமுடைய நாயனார்க்கு ஆறகளூருடைய பொன் பரப்பினான வேட்டும் இராஜா ராஜா தேவனாரான விக்கிரம சோழ மகதை நாடாழ்வார் திருநாமஞ் சாத்தி செய்த திருவோலக்க மண்டபம் எடுத்து வலிய பெருமானென்று இது செய்வித்தான் சென்னிவலக்கூற்றத்து ஆற்றூருடையான் பட்டன் பொன்பரப்பினான சித்திரராயன் ஸ்ரீமாயேஸ்வர ரக்‌ஷை .

வேட்டும்-வேட்டுவன்

 வேலூர் குடியாத்தம் பகுதிகளை தலைமையிடமாக கொண்டு ஆண்ட மாவலி வாணாதிராயர்கள்:
சங்க காலத்தில் பாணர் ( மாவலி வாணாதிராயர்கள்)  இப் பகுதிகளை ஆண்டார்கள் . பிறகு இவர் வழியில் வந்தவர்கள் கிபி 4 முதல் கிபி 10 வரை  கல்வெட்டுகளிலும் ,செப்பேடுகளிலும் பேசபடுகிறார்கள் .
பிறகு சோழர்  மன்னர்களுக்கு கீழ் படைதலைவராகவும் ,அமைச்சர்களாகவும் இருந்தவர்கள்:

முதலாம் பரந்த சோழனின் ஆட்சியில் (கிபி 913) கும்பகோணம் கல்வெட்டு ஒரு மாவலி வாணாதிராயர்கள் பற்றி கூறப் பட்டுள்ளது .
சுந்தர சோழனின்  படை தலைவனாக ஒரு மாவலி வாணாதிராயர்கள்   இலங்கை போரில்(கிபி 965) கலந்து கொண்டு உயிர் துறந்ததை பற்றி  கும்பகோணம் கல்வெட்டு கூறுகிறது .
முதலாம் ராசா ராசா சோழனின் கல்வெட்டில் ஒரு 'ராசா ராசா வாணகோவரையர்' பற்றி கூறப்பட்டு உள்ளது .

முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் ஒரு 'ராஜேந்திர சோழ மாவலி வாணாதிராயர்கள்' பற்றி திருவண்ணாமலை கல்வெட்டு கூறுகிறது .
முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில்  இலங்கேஷ்சுவர  வாணகோவரையர் பற்றி அரியலூர் கல்வெட்டு கூறுகிறது .விக்கிரம சோழ ஆட்சியில்  'விருதபயங்கர  சுத்த மல்லனான  வாணகோவரையர்' பற்றி கூறப் பட்டு உள்ளது .
பிறகு

சேலம் ஆத்தூரை தலைமை இடமாக கொண்டு ஆண்ட வாணகோவரையர்கள் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள். 

1.ராசா ராசா வாணகோவரையர்
2.மகத நாடாள்வான்
3.குலோத்துங்க வாணகோவரையர்
4.வன்நெஞ்ச வாணகோவரையர்

 மதுரை அலங்காநல்லூர் பகுதியை தலைமை இடமாக கொண்டு ஆண்ட வாணகோவரையர்கள் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள்
1.திருமாலிருஞ்சோலை மாவலி வாணாதிராயர் (கிபி 15)
2. சுந்தரதோள்உடையான்  மாவலி வாணாதிராயர் (கிபி 15,16)
3. இறந்தகாலம் எடுத்த சுந்தரதோள்உடையான்  மாவலி வாணாதிராயர் (கிபி 16)-இவர் மதுரை நாயக்க மன்னரோடு போர் செய்து தோற்ற பிறகு ஆட்சி அதிகாரத்தை இழந்தவர் .

மணலி வாணாதிராயர்(இவர் மதுரை நாயக்க மன்னரோடு சண்டை செய்தவர் ),காளை வாணாதிராயர் போன்றோர் மதுரை நாயக்கர் ஆட்சியில் இருந்த குறுநில தலைவர்கள் .






'வாணகோ வேட்டுவதி அரையர் ' பற்றி கல்வெட்டு ( ARE 241/1979-80) கூறுகிறது .
ஆனைமங்கலம் என்னும் ஊரை ஆண்ட 'வேட்டுவதி வாணகோவரையார் 'பற்றி கல்வெட்டு (செங்கம் நடுகற்கள் 1971/39) கூறுகிறது .
மேற்கொவலூர் நாட்டை ஆண்ட 'வாணகோவரையார் வேட்டுவதி அரையர் ' பற்றி கல்வெட்டுகள் (செங்கம் ...நடுகற்கள் 1971/45) கூறுகிறது .

'கரும்புறதார்க் கெல்லாம் அரசரான மாவலி வாணா' என்று காளமேகபுலவர் கூறுகிறார் .( காளமேக புலவர் ,தனிப்பாடல் திரட்டு ,508).
கரும்புறத்தார் -வேடர் .

மணிமேகலை காலத்துச் சோழ வேந்தனாகிய நெடுமுடிக் கிள்ளியின் தேவி சீர்த்தி யென்பவள் மாவலி மரபில் தோன்றிய ஓர் அரசன் மகள் என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகின்றார்.
'நீரிற் பெய்த மூரிவார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி யென்னுந் திருத்தகு தேவியொடு,
(மணிமேகலை 19. 51 - 116).

'மூத்தஅரைசர்,இளவரைசர் என்ற இரு துணை பெயர்கள் வருகின்றது .இவற்றில் மூத்தஅரைசர் என்பது மூத்த அரையர் பரம்பரை யை குறித்து வந்தது என்று கருதபடுகிறது .உண்மையில் இந்த சொல் ஒரு குலத்திலே மூத்த (senior lineage) குலம் என்பதை குறித்து வந்தது .பெரும்பாண மூத்தஅரைசர் , பெரும்பாண இளவரைசர் என்று கூறுவதில் இருந்து இது உறுதி படுகிறது .தற்கால முத்தரையர் என்ற குலத்துக்கும் பெரும்பாண முத்தரைசர் கும் தொடர்பேதும் இல்லை .மேலும் வாணா கொவரையர் பரம்பரை இல் வாணகோ மூத்தஅரைசர் என்றும் வாணகோ இளவரைசர் என்றும் கூறப்படும் இரு பிரிவுகள் இதனை வலி உறுத்துகிறது . இளவரைசர் என்பது ஒரே குலத்தின் இளைய பிரிவினை (Junior lineage) குறித்து வந்தது எனலாம்' (தொல்குடி -வேளிர்-அரசியல் (செங்கம் நடுகற்கள் ) ).

'...வீர சேனாதிபதி பருவான வேட்டுவ இளவரைசர் சேனை எரிந்து பட்டார் கல் '( தருமபுரி ,அரூர் கல்வெட்டு .கி பி 8).

மாவலி வேட்டுவ குலத்தை சேர்ந்த புலிகுத்தி கல் :
திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய வகை ‘புலி குத்திக் கல்’
கொடுவாயில் காணப்படும் நடுகல் 100 செ.மீ அகலமும், 120 செ.மீ உயரமும் கொண்டதாகும். இதன் மேற்பகுதியில் மூன்று வரிகளைக் கொண்ட தமிழ் எழுத்துச் செய்தி உள்ளது. இதில் வீரனின் தலை நேராகப் புலியைப் பார்த்த வண்ணம் உள்ளது. காதில் காதணியும், கழுத்தில் சரப்பளி என்னும் ஆபரணமும் கையில் வீர காப்பும் இடையில் மட்டும் நல்ல வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடையும் அணிந்துள்ளார். இடையில் குறு வாள் வைத்துள்ளார். தன் இரண்டு கைகளிலும் ஈட்டியைப் பிடித்துப் புலியின் வயிற்றுப் பகுதியில் குத்தும் நிலையில் வீரக்கல் வடிவமைக்கப்பட்டுள்ளது. புலியின் முன்னங்கால் இரண்டும் எழுந்த நிலையில் வீரனை தாக்கவும், ஈட்டியைத் தடுக்கும் நிலையில் உள்ளது. பின்னங்கால் வீரனின் இடது கால் மேல் உள்ளது. புலியின் வால் மேல் நோக்கி உள்ளது.

“கொடுவாயில் முத்து (ப்) புவன வாணராயன் மகன் முத்தனுக்குத் தாய் வெட்டுவித்த கல்“
என்று அக் கல்வெட்டில் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொடுவாயில் உள்ள முத்து புவன வாணராயன் மகன் முத்தன் என்பவர் மாட்டு மந்தை மற்றும் மனிதர்களை காப்பற்ற புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்துள்ளார். அவரின் நினைவாகவும், வீரத்தின் அடையாளமாகவும் அவனது தாய் ஏற்படுத்திய நடுகல் என்பது அதன் பொருளாகும். தன் மகனுக்கு தாய் ஏற்படுத்திய வீரக்கல் என்பதால் இது மிகச் சிறப்புடையதாகும்.

மாவலி வேட்டுவ மன்னர்களின் வைப்பாட்டிகளுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு 'பிள்ளை வாணகோவரையர்', 'பிள்ளை மகாபலி வாணராயர் ', 'பிள்ளை குலசேகர வாணராயர் ' போன்ற பட்ட பெயர்களை கொடுத்து அதிகாரிகளாகவும் ,குறுநில தலைவர்களாகவும் வைக்க பட்டதை பற்றி கல்வெட்டுகள் கூறுகிறது . மேலும் வேட்டுவ அரசர்கள் தங்களுடைய அரசியல் அதிகாரிகளுக்கு 'வாணராயர்' என்ற பட்ட பெயர் கொடுக்க பட்டதை கல்வெட்டுகள் கூறுகிறது ..

இருக்குவேளிர்



இருக்குவேளிர்( கொங்கு சோழர்)   மன்னர்கள் குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள் 

கொடும்பாளூர் இருக்குவேளிர் கொங்கு வேட்டுவ குலத்தை சேர்ந்தவன் என்பதற்கான ஆதாரம்:

'வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட,
கட்சி காணாக் கடமா நல் ஏறு'
puram-202

சபரராஜன்-வேட்டுவராஜன்
நிஷதராஜன்-வேட்டுவராஜன்

ஸ்ரீ ரங்கம் கோயில் கல்வெட்டுகள்' நிஷதராஜன்' பற்றி கூறுகிறது .இந்த கல்வெட்டுகள் முதலாம் குலோத்துங்க சோழனின் காலத்தை சேர்ந்தது .

'கேரளாண்டரான நிஷதராஜன் மகளார் திருகொடுங்குன்றமுடையாரான நிஷதராஜன் தேவியார் கண்ணுடை பெருமாள் பிராட்டி ஆழ்வார் இக் கோவில்செய்வித்தார்' (புதுகோட்டை கல்வெட்டு எண் -174,குலோத்துங்க சோழன் 1)

கேரளாண்டரான நிஷதராஜன் -கொற்ற வேட்டுவ குலம் (வீர கேரளர் )
திருகொடுங்குன்றமுடையாரான நிஷதராஜன்- குடுமி வேட்டுவ குலம் (இருக்குவேளிர்)

' ராஜேந்திரசோழன் கேரளன் வேட்டுவராஜன் ' என்பவரை பற்றி பொன் அமராவதி கல்வெட்டு கூறுகிறது .
ராஜராஜ 2 ,கி பி 1153-54,புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-132.
'வீமன் ராஜேந்திரசோழ வேட்டுவராஜன் ' என்பவரை பற்றி பொன் அமராவதி கல்வெட்டு கூறுகிறது .
ராஜராஜ 2 , கி பி 1164-65 ,புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-137.
'ராஜேந்திரசோழ கேரளன் வேட்டுவராஜன்' என்பவரை பற்றி பொன் அமராவதி கல்வெட்டு கூறுகிறது.குலோத்துங்க 3,கி பி 1189-90 ,புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-147.
' திருகொடுங்குன்றமுடையன் அழகியதேவன் வேட்டுவராஜன் ' என்பவரை பற்றி பொன் அமராவதி கல்வெட்டு கூறுகிறது.
குலோத்துங்க 3,வருடம் 18 =கி பி 1195-96,புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-150.
திருகொடுங்குன்றமுடையன்' கேரளன் வேட்டுவராஜன் 'என்பவரை பற்றி பொன் அமராவதி கல்வெட்டு கூறுகிறது.ஜடவர்மன் குலசேகரன் 1,கி பி 1213,புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-245.
திருகொடுங்குன்றமுடையன் நாடாள்வான் என்பவரை பற்றி புதுகோட்டை கல்வெட்டு எண்-380 கூறுகிறது .(வீரபாண்டியன் , எண்-380 )
'கண்டன் சுந்தர வில்லி நிஷதராஜன்' என்பவரை பற்றி புதுகோட்டை கல்வெட்டுகள் கூறுகிறது .(சுந்தரபாண்டியன், புதுகோட்டை கல்வெட்டு எண் -)

இருக்குவேளிர்தான் கொங்கு சோழர்கள் என்பதற்கு ஆதாரம் :

'...கோநாட்டான் வீரசோழ பன்மற்கு ...'
(கொங்கு சோழர் ,வீர சோழர்,கி பி 942)
'...கோ நாட்டான் வீரசோழ பெருமானடிக்கு ...'
(கொங்கு சோழர் ,வீர சோழர்,கி பி 981)
'...கோநாட்டான் விக்கிரம சோழன் ---'
(கொங்கு சோழர், விக்கிரம சோழன் ,கி பி 1024) .

இருக்குவேளிர்கள்(கொங்கு சோழர் ) குடுமி வேட்டுவகுலத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் :

'...பொங்கலூர் நாட்டு கீரனுரான கொழுமம்கொண்ட சோழநல்லூர் உடையார் சுந்தன் அதிசிய சோழனான குலோத்துங்க சோழ இருங்ககோளன் மணவாட்டி ...'
(S.I.I Vol-V,No-266,கி பி 1218,கீரனூர் )
உடையார் -மன்னர்
கொங்கு சோழர் -குலோத்துங்க சோழ இருங்ககோளன்(கி பி 1196-1207)

'.... பொங்கலூர் நாட்டு கீரனூர் குடுமரில் சுந்தன் அதிசிய சோழனான குலோத்துங்க சோழ இருங்ககோளன் இந்நாயனார் திருவாகிச்வரமுடையார் ..'
(S.I.I Vol-V,No-278,கி பி 1218,கீரனூர் )
'..பொங்கலூர் நாட்டு கீரனூரில் இருக்கும் ஐங்கை குடுமிச்சிகளில் சோழன் உமையால் அனுந்திர பல்லவ அரசி தருமம் '
(பல்லடம் செலகரிச்சல் ,கிபி 1280)
குடுமிச்சி-பெண்பால் பெயர்
குடுமி -ஆண்பால் பெயர்

கொங்கு பாண்டியரின் ஆட்சியை சேர்ந்த பொங்கலூர் கல்வெட்டு 'பூலுவ குடுமரில் பெரிய பிளின்னான கண்டிமுடையார் ' என்பவரை பற்றி கூறுகிறது . வேட்டுவர் சாதியை 'பூலுவர்' என்றும் 'காவலன் ' என்றும் 'மாவலியர்' என்றும் 'வில்வேடுவர்' என்றும் அழைக்கபட்டது.
இன்று குடுமி வேட்டுவ குலத்தினர் சென்னிமலை அருகே உள்ள 'பிராட்டி அம்மன் ' தெய்வத்தை குல தெய்வமாக வணங்கி வருகிறார்கள் .

கீரனூர் குடுமி வேட்டுவ குலத்தை பற்றி செப்பேடுகளும்,ஓலை சுவடிகளும் கூறுகிறது .இன்று குடுமி வேட்டுவ குலத்தின் குல தெய்வம் பிராட்டி அம்மன் ஆகும் .

'...காங்கேய நாட்டில் காடவூரில் காவலன் வளவரில் .....மனைகிழத்தி சோழாண்டி பட்டாலியில் ...'
(வேட்டுவ சோழர் ,கி பி 1215,காங்கேயம் ,1920:265).
காவலன் -வேட்டுவரில் ஒரு பிரிவு .
வளவர் -கூட்ட பெயர்
சோழ அரசர்களை சென்னி ,வளவர் ,செம்பியர் போன்ற பெயர்களில் அழைக்கபட்டன.
'நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால் பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்'
(சிலப்பதிகாரம்- காடுகாண் காதை)
கொடும்பாலூர் ஊரை 'கொடும்பை' என்று சிலப்பதிகரத்தில் கூறப்பட்டு உள்ளது .
கொடும்பை-குன்றம் ,மலை ,கொடும்பை -கொடும்பூர்

'..கொடும்பூர் வேட்டுவரில் பெரியதேவன்..' (கொங்கு சோழர் ,வீரராஜேந்திரன்,கி. பி 1244,பட்லூர் கல்வெட்டு )

'...ஊராளி மலை வேட்டுவரில் கோயன் இருங்கோளன் கரிய பெருமாளான வலங்கை மீகாமன்..' (நாமக்கல் கல்வெட்டு ,கி.பி 1236)
இந்த வேட்டுவர்கள் கொடும்பை (கொடும்பாளூர் ) பகுதியில் இருந்து கொங்கு நாட்டுக்கு வந்த வேட்டுவர்கள் ஆவர் . இருக்குவேளிரும் இந்த ஊராளிகளும் ஒரே குலத்தை சேர்ந்தவர்கள்.

'...சிறுத்தலை வேட்டுவரில் தாமன் தமான இருங்கோளன்..'
(கொடிவேரி கல்வெட்டு ,கி பி 1162)
'.. சிறுத்தலை வேட்டுவரில் இருங்கோளன் கந்தமன்..'
(கொடிவேரி கல்வெட்டு ,வீர ராஜேந்திர சோழன் ,கி பி 1216).
'.. சிறுத்தலை வேட்டுவரில் இருங்கோளன் கந்தமன்..'
(கொடிவேரி கல்வெட்டு ,வீர ராஜேந்திர சோழன் ,கி பி 1229).
'...குண்டோடத்தில் குடுமரில் இருங்கோளன்..'
(தாராபுரம் கல்வெட்டு ,கொங்கு சோழர் ,கி பி 1159)
இவன் குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்தவன் .

'முனையதரையர் வேட்டுவன் ஆளவந்தானான இருங்கோளன்' என்பவன் கிபி 12 கலீல் அரசியல் அதிகாரியாக இருந்தான் என்பதை ஜம்பை கல்வெட்டு (1938:436) கூறுகிறது .

முனையதரையர் மன்னருக்கு 'இருங்கோளன்' என்ற பட்ட பெயர் இருந்ததை இக் கல்வெட்டு கூறுகிறது .

'...கரை வழி நாட்டு தொழு முதலிகளில் சோழன் கூத்தனான வீர ராஜேந்திர இருங்கோளன்..'(கடத்தூர் கல்வெட்டு ,கி பி 1224).
'..பொங்கலூர் நாட்டு கீரனூர் முதலிகளில் ..வீர ராஜேந்திர இருங்கோளன்..'
(கடத்தூர் கல்வெட்டு ,கி பி 1226)
'...மன்றாடிகளில் காவன் சோரனான வீர சோழ இருங்கோளன்..'
(கடத்தூர் கல்வெட்டு ,கி பி 1221).
'... அதிய சோழன் வீர சோழ இருங்கோளன்..'
(கடத்தூர் கல்வெட்டு ,கி பி 1159).
முதலி -அரசு அதிகாரி .
.
கொங்கு நாட்டில் கிடைக்கும் 'இருங்கோளன்' என்று உள்ள அணைத்து கல்வெட்டுகளும் வேட்டுவ குலத்தை சேர்ந்தது .

கொல்லி மழவர்

    

வல் வில் ஓரியின் வம்சவழியினர்(கொல்லி மழவர்) புல்லை வேட்டுவ குலத்தவர்கள் (கொல்லி வேட்டுவர் ) ஆவார்கள் .

வல்வில் என்று அவன் பெயரின் அடைமொழி குறிப்பிடுகிறது. வில்லுக்கு உரிமையுடையவர்கள் யார்? வேட்டுவர்கள். ஓரியைப் பற்றி வன்பரணர் பாடிய பாடல்,
………யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும் ஈங்கோர்
வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் (புறம் 152)
...
என்று விறலியர் புகழ்வதாகக் கூறுகின்றது. பல நாடுகளுக்குச் சென்று வருபவர்கள் நாங்கள்; ஆனால் எங்கும் உனக்கு நிகரான வேட்டுவர் எவரும் இல்லை என்பது இதன் பொருள். ஆக வல்வில் ஓரி வேட்டுவர் சாதியைச் சேர்ந்தவன் என்பது உறுதிப்படுகிறது.
வல் வில் ஓரியின் வம்சாவளியினர் கொல்லி மழவர்கள் ஆவார்கள் .

சுந்தர சோழனின் 5ஆவது (கி பி 961) மற்றும் 10ஆவது (கி பி 966) ஆட்சி ஆண்டில் திருச்செங்கோடு செபெடுகள் வெளி இடப்பட்டது.(S.I.I Vol 3,part4,No 212,213 ) .

'...கொல்லி மழவன் ஒற்றியூரன் பிரதி கண்டவர்மன் என்னாட்டு தூசியூர் தென் புல தூநிலம் ----' (திருச்செங்கோடு செபெடுகள் )

'....தூசியூர் நகர '(நாமக்கல் .பொம்மசமுத்திரம் கல்வெட்டு .கி பி 947,பராந்தகன் 1)
கொல்லி மழவன் இந்த தூசியூர்ரை சேர்ந்தவன் .நாமக்கலில்... இருந்து 6கி மீட்டர் தொலைவில் இருக்கிறது .

'..பிரதி கண்டன் தரசோழன்..'
(நாமக்கல் ,கொல்லிமலை கல்வெட்டு ,உத்தம சோழன் ,கி பி 980)

கொல்லி மழவன் பிரதிகண்டன் சுந்தர சோழனை (கொல்லி மழவன் ஒற்றியூரன் பிரதிகண்ட வர்மனின் மகன் ) பிரதிகண்டன் தரசோழன்( சுந்தர சோழன் ) என்று கல்வெட்டுகளில் கூறபட்டு உள்ளது.
கொடும்பாளுரை ஆட்சி செய்த குறுநில மன்னன் சிறிய வேளான் மற்றும் நாமக்கலை ஆட்சி செய்த குறுநில மன்னன் கொல்லி மழவன் ஒற்றியூரன் பிரதிகண்ட வர்மன் இந்த இரண்டு குறுநில மன்னர்களும் சுந்தர சோழனின் 9 ஆம் ஆட்சி ஆண்டு ஈழ படையெடுப்புக்கு(கி பி 965) ஆதரவாக இருந்தார்கள் என்பதை கொடும்பாலூர் கல்வெட்டு (S.I.I Vol 3,part 3 and iv,page 476,Annual report on epigrphy for 1913-14,part 2,paragraph 15) மற்றும் திருச்செங்கோடு செபெடுகள் மூலம் அறியலாம் .

'...கொல்லி கிரிக் குடையவர்கள் கூறிய னாடுதனிலே வாசகங் கூறி வைத்து கொண்ட பெரியவர்கள் ...' ( அல்லால இளையான் செப்பேடு)
கொல்லி மலைக்கு உரிமை படைத்தவர்கள் வேட்டுவ குலத்தவர்கள் என்று அல்லால இளையான் செப்பேடு கூறுகிறது .
வேட்டுவ குலங்களில் கொல்லி வேட்டுவ குலம் இருக்கிறது .
வல் வில் ஓரி வேட்டுவ குலத்தை சேந்தவன் என்று புறம் 152 கூறுகிறது .

புல்லை வேட்டுவரில் காவேரி நாடாள்வான் தேசி ஆளபிறந்தான் மும்முடி சோழ சக்கரவர்த்தி ஆன அங்கராயன் என்பவரை பற்றி நாமக்கல் (மழ கொங்கு ) கல்வெட்டு (S.I.I Vol 22,part 1,No-9) கூறுகிறது .
மழ கொங்கு நாட்டை ஆட்சி செய்த வேட்டுவ குறுநில மன்னன்(கொல்லி மழவன் ) புல்லை வேட்டுவ குல தலைவனாக இருந்தவன் . சோழ பேரரசி செம்பியன் மாதேவி புல்லை வேட்டுவ குல தலைவனின் பெண் . கி பி 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாமக்கல் கல்வெட்டு புல்லை வேட்டுவரில் காவேரி நாடாள்வான் என்பவரை பற்றி கூறுகிறது .

கொல்லி மழவனின் வம்சாவளியினர் புல்லை வேட்டுவ குலத்தவர்கள் ஆவார்கள் .இன்று புல்லை வேட்டுவ குலத்தின் குல தெய்வம் ராசா கோயில் (நாமக்கல் ,பள்ளிபாளையம்) ஆகும்

முனையதரையர்

                                                           
           முனையதரையர் மன்னர்கள் முன்னை (மின்ன ) வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள் .

 மின்ன (முன்னை) வேட்டுவ குலத்தவர்கள் திருமுனைபாடி நாட்டை ஆண்ட என்பதையும் ,கிபி 12 நூற்றாண்டுகளின் திருமுனைபாடி நாட்டில் இருந்து கொங்கு நாட்டை நிர்வாகம் செய்வதற்கு  கொங்கு நாட்டிற்கு வந்தார்கள் என்பதை கல்வெட்டுகள் உறுதி படுத்துகிறது .முன்னை என்ற சொல்லின் மருவு ,மின்ன என்ற சொல்

திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு திருமுனைப்பாடி நாட்டை ஆட்சி செய்தவர் நரசிங்க முனையரையர் ஆவார். 63 நாயன்மார்களில் ஒருவரான இவர் .
                                 
'முனையதரையர் வேட்டுவன் ஆளவந்தானான இருங்கோளன்' என்பவன் கிபி 12 ஆம் நூற்றாண்டுகளில் அரசியல் அதிகாரியாக இருந்தான் என்பதை ஜம்பை கல்வெட்டு (1938:436) கூறுகிறது .

முனையதரையர் மன்னருக்கு 'இருங்கோளன்' என்ற பட்ட பெயர் இருந்ததை இக் கல்வெட்டு கூறுகிறது .

நரசிங்க முனையரையர் புராணம்:- 1. இம்மரபினரைப் பற்றிய
கல்வெட்டுக்கள் சில உண்டு. அவற்றுள் பழமையானது மூன்றாம் நந்திவர்மன் மகனான
நிருபதுங்கனது (கி.பி. 865 -900) 16ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டாகும்.
அத்திருவதிகைக் கல்வெட்டில், "முனைப்பேரரையர் மகன் முனையர்கோன்
இளவரையன்" என்பது காண்கிறது. நிருபதுங்கன் தந்தையான கழற்சிங்கரும், சுந்தரரும்,
அவரை வளர்த்த நரசிங்க முனையரையரும் ஏறத்தாழ ஒரு காலத்தவர். (கி.பி. 840 -
865) ஆகலின் மேற்சொன்ன கல்வெட்டில் குறிக்கப்பட்ட முனைப்பேரரையர் நமது
நரசிங்க முனையரையர் ஆகலாம் என்று கோடல் பொருந்தும்.

2. நிருபதுங்கனுக்குப் பிற்பட்ட அபராஜிதவர்மன் ஆட்சியில் முனையதரையன்
அபராசிதன் குலமாணிக்கப் பெருமானார் என்று ஒருவன் இருந்தான் என்று
திருநாவலூர்க் கல்வெட்டு ஒன்று குறிக்கின்றது. (S.I.I. VII, 999) இவ்வரச மரபினர்
தொடர்ந்து சோழர் ஆட்சியிலும் இருந்து வந்தனர்.

3. வீரராசேந்திரன் ஆட்சியில் வீரராசேந்திர முனையதரையன் என்பவன்
இருந்தான். (S.I.I. IV, 529).

4. விக்கிரமசோழனிடம் (கி.பி.1118 - 1135) அமைச்சனாகவும் தானைத்
தலைவனாகவும் ஒரு முனையதரையன் இருந்தான் (விக்கிரமசோழன் உலா வரி. 139-42).

5. நரசிங்க முனையரையர் கழற்சிங்கனான மூன்றாம் நந்திவர்மன் காலத்தவர்.
அவர் திருவாதிரை விழாவில் அடியாரை உபசரித்து ஒவ்வொருவர்க்கும் 100
பொன்னுக்குக் குறையாமல் கொடுத்து உண்பித்தவர் என்பது சேக்கிழார் திருவாக்கு.
இங்ஙனம் அவர் காலத்தில் திருவாதிரை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது;
அடியார்க்கு உபசாரம் செய்யப்பட்டது என்பதைக் கல்வெட்டால் அறியலாம்.
"வழுவூரான் என்பவன் குன்றாண்டார் கோவிலில் (புதுக்கோட்டைச்சீமை) நடைபெற்ற
திருவாதிரை விழாவில் 100 பேர்க்கு உணவளிக்க அரிசி தானம் செய்தான் (347 of
1914) என்று நந்திவர்மனது 3ஆம் ஆட்சி ஆண்டுக் (சுமார் கி.பி. 842) கல்வெட்டுக்
கூறுகிறது.

வல்லங் கிழான் மல்லன்   திருசிற்றம்பலம்யுடையனான முனையதரையன் என்பவரை பற்றி கோவை அன்னூர் கல்வெட்டு (கிபி 1260 களில்) கூறுகிறது. .,புகழ் வேண்டியான் முனையதரையன் என்பவரை பற்றி காங்கேயம் கல்வெட்டு (கிபி 1230 களில் ) கூறுகிறது .மேல்கரை  பூந்துறை நாட்டு  நசியனூர்  முனையதரையன் என்பவரை பற்றி கல்வெட்டு (கிபி 1341) கூறுகிறது .
முன்னை வேட்டுவ குலத்தை பற்றி கிபி 16 ஆம் நூற்றாண்டு கொடிவேரி கல்வெட்டு கூறுகிறது .