Sunday, 21 August 2016

வேட்டுவர் நடுகற்கள்

                                  வேட்டுவர் நடுகற்கள்



வேட்டுவர் நடுகற்கள்
ஆந்தை வேட்டுவ குலம்(கீரனூர் ஆந்தை வேட்டுவ குலம்,கீரந்தை வேட்டுவ குலம் ):
"ஆந்தை பொன்னி மகன் மோடையன்" தொறுமீட்டு பட்ட நடுகல் கி.பி 911 - (No. 45/1971) - செங்கம் அய்த்தாம்பாளையம்
ஆந்தைப்பாடி ஊர் - கி.பி. 7ஆம் நூற்றாண்டு - (No 77/1971) - செங்கம் தண்டம்பட்டி
ஆந்தை வேட்டுவ குல படை வீரர்கள் போர் பாசறை (பாடி வீடு ) அமைத்த ஊரை ஆந்தைபாடி என அழைக்கபட்டது .ஆந்தை வேட்டுவ குலத்தை கூகை குலம் என வேட்டுவ கலிவெண்பா கூறுகிறது .

பெரும்பாணபாடி நாட்டை(தமிழ் மண்ணின் வட பகுதி) சேர்ந்த நரசிங்கராயர், சந்தணராயர், பல்லவராயர், பூவலவராயர் இந்த நால்வரும் சேர ,பாண்டிய மற்றும் சோழ வேட்டுவ அரசர்களுக்கு படை உதவி அளித்தனர் .இதனால் அரசர்கள் இந்த நால்வருக்கும் குறிப்பு நாட்டில் இருந்த 32 கிராமங்களை ஆட்சி ,அதிகாரம் செய்வதற்கு அளித்தனர் என்று குறிப்புநாட்டுச் செப்பேடு கூறுகிறது .வேட்டுவ குலத்தவர்களை குரு குலத்தவர்கள் என்று புராணங்கள் கூறுகிறது .இந்த நான்கு பெரும் ஆந்தை வேட்டுவ குலத்தை( கீரந்தை ,கீரனூர் ஆந்தை ) சேர்ந்தவர்கள் . இவர்கள் தமிழ் மண்ணின் வட பகுதியில் இருந்து கொங்கு நாட்டுக்கு வந்தவர்கள் .
மூலம்
"சுபமஸ்து ஈஸ்பரி அம்மன் மகாமண்டலேஸ்வானரிய தனவிபாடன பாசைக்கரிதப்பு வராதகண்டன் யெம்மண்டலம் திரை கொண்டருளிய ராஜாதி ராஜன் ராஜபரமேஸ்வரன் ராஜமார்த்தாண்டன் ராஜகெம்பீரன் ராஜபுங்கரன் ராசவச்சிரதன் சேரன், சோளன், பாண்டியன் மூவராசாக்களும் ஆரிலொரு கடமைகொண்டு அசையாமணிகட்டி ராஜியபரிபாலனம் பண்ணுகின்ற சாலிவாகன சகார்த்தம் 1815 இதன்மேல் செல்லாநின்ற ஸ்ரீமுக ஆவணி 20தேதியும், சுக்கிரவாரமும், தசமியும் அமுர்தகெளிகையும் கூடின சுபதினத்தில் ஆளுத மகாசுவாமி மூவராசாக்களும் செங்கோலதிகாரம் செலுத்துகின்ற நாளையில் வடதேசத்திலிருந்து குருகுலத்து வேட்டுவ ராஜாக்கள் எங்களுக்கு உதவியாகத் தருவிச்சு இருந்ததினாலே யிவர்களில் நரசிங்கராயர், சந்தணராயர், பல்லவராயர், பூவலவராயர் இந்த நாலுபேருக்கும் குறிப்புநாடு 32 கிராமத்துக்கும் சதிர்மத்தியில் கைத்தமலை, அருளுமலை, வட்டமலை, திட்டமலை, பவளமலை இந்த 5 மலையுள்ள சதுர்மத்தியில் வடக்கு காவல காஞ்சிநாட்டுக்கு சேர்ந்த பாரியூர் எல்லைக்குந் தெற்கு முடச்சியூர் எல்லை பவளமலைக்கும், தெற்கு பூந்துரைநாட்டில் பெருந்துரை எல்லை எழுத்துப்பாரை கருங்காட்டுக்கும், மேற்கு காங்கயநாட்டெல்லைக்கும், ஆருநாட்டில் நம்பியூர் எல்லைக்கும், கிழக்கு இந்த நால்பாங்கிலேயும் அங்கமச்ச அடையாளம் சிலாசாசனங்கள் உவிக்குளியும், செப்புப்பட்டயமும் எழுதிக்கொடுத்து நாலுபேருக்கும் குறிப்புநாடு முப்பத்திரண்டு கிராமமும் சர்வ அதிகாரம் பண்ணிக்கொண்டு துஸ்டநிர்க்கிரக சிஸ்டபரிபாலனம் செய்துகொண்டு தரும நீதியாய் புத்திர பவுத்திர பாரம் பரிகதையாய் சுகமே இருக்கும் படிக்கு இன்னால்வருக்கும் பட்டாபிஷேகம் பண்ணி நாட்டாரென்றும், பட்டக்காரரென்றும், பாளையக்காரரென்றும் நிலைநாட்டுப்பண்ணி வச்சிருக்கிறோம். குறிப்புநாடு 32 கிராமத்துக்கும் விபரம், குருமந்தூர், கோசணம், செவியூர் அயிலூர், கொளப்பலூர், அலிங்கியம், முடச்சியூர், கலிங்கியம், ஆதியூர், சிருவலூர், குண்ணத்தூர், அளுக்குழி தாளுன்றி, திங்களூர், முத்தூர், நல்லூர், திருப்பூர், வாய்ப்பாடி, விஜயமங்கை, கூடலூர், சிருக்களிஞ்சி, செங்கப்பள்ளி, மண்ணறை, பாலதொளுவு, அல்லாளபுரம், வெள்ளரவழி, முகுந்தை, கந்தாகண்ணி கொடுமணல், அமுக்கியம், தெக்கலூர், ஊத்துளி இந்த 32 கிராமமும் சருவ அதிகாரம் பண்ணிக்கொண்டு சகமே யிருக்கும்படிக்கு நாங்கள் மூவராசக்களும் ஒரு மனசுடனே எழுதிக்கொடுத்த செப்பேடு பட்டயம் யிதுக்கு மதுரை மீனாக்ஷியம்மன், சொக்கனாத சுவாமி பூமி, ஆகாசம், சந்திர, சூரியர் சாக்ஷி இந்த சாசனப்பட்டயத்தை யிகளிதஞ் செய்தபேர்கள் காசி கெங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் ஸ்ரீராமஜெயம் "

காடை வேட்டுவ குலம் :
"கொங்கத்து எழுமாத்தூர் இருந்து வாழும் சாகடச் சிற்றன்" - கி.பி 9ஆம் நூற்றாண்டு - பல்லவ கம்பவர்மன் காலம் - (No 57/1971)

இன்று வாழ்ந்து வருகிற காடை வேட்டுவ குலத்தினரை குறுங்காடை வேட்டுவ குலம்,சாகாடை வேட்டுவ குலம் என கல்வெட்டுகளில் அழைக்கப்பட்டது .இன்றும் காடை வேட்டுவ குலத்தினரை குறுங்காடை வேட்டுவ குலம்,சாகாடை வேட்டுவ குலம் என அழைக்கபடுகிறது.சாகாடை வேட்டுவ குலத்தை சிவகாடை குலம் என வேட்டுவ கலிவெண்பாவில் பிழையாக எழுத பட்டு இருக்கிறது.